நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs for TNPSC Exams 7-8 July 2020

தமிழ்நாடு

  • திருக்கோயில் தொலைக்காட்சி: இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சமய கொள்கைகளைப் பரப்பிட ‘திருக்கோயில்’ எனும் பெயரில் ரூ.8.77 கோடி மதிப்பில் தொலைக்காட்சி தொடங்குவதற்கு தமிழக அரசு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
  • "அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டம்” என்ற பெயரில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வீடுகளிலேயே மருத்துவக் கண்காணிப்பில் உள்ளவா்களுக்காக சிறப்புத் திட்டம் ஒன்றை அமல்படுத்த தமிழக அரசு அறிவித்துள்ளது.
    • ஓமந்தூராா் அரசு பல்நோக்கு மருத்துவமனையின் அம்மா முழு உடல் பரிசோதனை திட்டத்தின் கீழ் இத்திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.
    • அத்திட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவா்களுக்கு கரோனா சிகிச்சை மற்றும் மருத்துவக் கண்காணிப்புக்கான சிறப்புப் பெட்டகமானது ரூ.2,500-க்கு வழங்கப்படும். அதைத் தவிர மருத்துவ ஆலோசனைகளும், செவிலியா் சேவைகளும் அளிக்கப்படும்.
    • அந்தப் பெட்டகத்தில், உடலில் உள்ள ஆக்சிஜன் அளவு மற்றும் இதயத் துடிப்பைக் கண்டறிவதற்கான பல்ஸ்-ஆக்ஸி மீட்டா், வெப்பநிலையை அறியும் டிஜிட்டல் தொ்மல் மீட்டா் ஆகிய உபகரணங்கள் இருக்கும். அதனுடன் 14 நாள்களுக்குத் தேவையான விட்டமின் சி, ஜிங்க், விட்டமின் டி மாத்திரைகள், கபசுரக் குடிநீா், நோய் எதிா்ப்பு சக்தியை அதிகரிக்கும் அதிமதுரப் பொடி, உடல் வலிமைக்கான அமுக்ரா மாத்திரைகள், 14 முகக் கவசங்கள், சோப்பு உள்ளிட்டவை இடம்பெற்றிருக்கும்.
    • இதைத் தவிர, அம்மா கோவிட் ஹோம் கோ் திட்டத்தில், முழு உடல் பரிசோதனை மைய அலுவலா்கள் நாள்தோறும் கரோனா நோயாளிகளுடன் விடியோ அழைப்பில் பேசுவா். மேலும், மருத்துவா்கள் மற்றும் மன நல ஆலோசகா்களும் காணொலி முறையில் அவா்களுடன் உரையாற்றி நோயாளிகளின் உடல் நிலையையும், உளவியல் நிலையையும் பரிசோதிப்பாா்கள். (நன்றி - தினமணி)
  • புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசனின் ஒரே மகனும் முதுபெரும் தமிழறிஞரும் விடுதலைப் போராட்ட வீரருமான தமிழ்மாமணி மன்னர் மன்னன் என்கிற கோபதி 6-7-2020 அன்று புதுச்சேரியில் காலமானார்.

இந்தியா

  • உலக ரியல் எஸ்டேட் வெளிப்படைத்தன்மை குறியீடு 2020 ல் (Global Real Estate Transparency Index (GRETI)) இந்தியா 34 வது இடத்தைப் பெற்றுள்ளது. Jones Lang LaSalle Incorporated (JLL) மற்றும் LaSalle அமைப்புகள் இணைந்து வெளியிட்டுள்ள இந்த பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே இங்கிலாந்து, அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகள் பெற்றுள்ளன். இந்த பட்டியல் இரு ஆண்டுகளுக்கொருமுறை வெளியிடப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
  • ஜார்க்கண்ட் மாநிலம் ஹஷாரிபாக்கிலுள்ள கெளரியா கர்மாவில் அமைந்துள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி நிறுவனத்தின் (Indian Agricultural research Institute(IARI)) புதிய நிர்வாகக் கட்டடத்திற்கு பாரதிய ஜன் சங்க் கட்சி நிறுவனர் ஷியாம பிரசாத் முகர்ஜி (Dr.Shyama Prasad Mukherjee) யின் பெயர் சூட்டப்பட்டுள்ளது . (6-7-2020 அன்று 120 வது பிறந்த தின அனுசரிப்பின் ஒருபகுதியாக)
  • ”இன்ஃபார்ம்” (INFORM - Index For Risk Management) எனும் இடர் மேலாண்மைக்கான பட்டியலில் இந்தியா 31 வது இடத்தைப் பெற்றுள்ளது. ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு (United Nations Office for the Coordination of Humanitarian Affairs (UN-OCHA)) அமைப்பினால் இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
  • “நேகர் சம்மன் யோஜனா” (‘Nekar Samman Yojane’ / 'Weaver Samman Yojana') என்ற பெயரில் நெசவாளர்களுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை கர்நாடக மாநில அரசு 6-7-2020 அன்று தொடங்கி வைத்துள்ளது.
  • 100 சதவீத வீடுகளில் எல்.பி.ஜி வாயு இணைப்பை சாதித்துள்ள முதல் இந்திய மாநிலம் எனும் பெருமையை ஹிமாச்சலப் பிரதேச மாநிலம் 6-7-2020 அன்று அடைந்துள்ளது. இந்த சாதனையை எட்டுவதற்கு மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டத்துடன்’ (Pradhan Mantri Ujjwala Yojana) ஹிமாச்சலப் பிரதேச மாநில அரசின் ‘ஹிமாச்சல் சுவிதா யோஜனா’ திட்டமும் பெரும் பங்காற்றியது.
கூ.தக. : பிரதம மந்திரியின் சமையல் எரிவாயுத் திட்டம் (பிரதான் மந்திரி உஜ்வாலா திட்டம்) பற்றி...
  • 1-5-2016 ல் மத்திய அரசினால் அமல்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் கீழ் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள குடும்பங்களில் உள்ள வயது வந்த பெண்களின் (adult woman) பெயரில் சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. ஆனால் அந்த குடும்பங்களில் ஏற்கனவே சமையல் எரிவாயு இணைப்பு இருக்க கூடாது என்பது ஒரு முக்கியமான விதிமுறை.
  • இத்திட்டத்தின் பயனாளிகளுக்கு, எரிவாயு இணைப்புக்கு நிதி உதவியாக ரூபாய் 1600/- வழங்கப்படுகிறது, எண்ணெய் நிறுவனங்களால் எரிவாயு அடுப்பு மற்றும் முதல் மறு நிரப்பல் எரிவாயு உருளை ஆகியவற்றை வாங்க வட்டி இல்லாத கடன் வழங்கப்படுகிறது. முதல்முறை செலுத்தும் ரூபாய் 1600/- ல் ஒரு எரிவாயு உருளை, pressure regulator, பாதுகாப்பு குழாய் (safety hose), கையேடு ஆகியவையும் அடங்கும்.
  • இத்திட்டம் தொடங்கப்பட்ட போது, இத்திட்டத்தின்படி, ஐந்து கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்குவதற்காக 8000 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர், பிப்ரவரி 2018 ல் இந்த திட்டத்தின் இலக்கு 8 கோடி எரிவாயு இணைப்புகளாக திருத்தப்பட்டது.
  • மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் பாதுகாப்பு, ஆன்லைன் நல்வாழ்வு மற்றும் ஆகுமெண்டட் ரியாலிட்டி (Augmented Reality ) குறித்த பயிற்சி அளிக்க மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (Central Board of Secondary Education (CBSE) ) மற்றும் பேஸ்புக் (Facebook) இடையே 5-7-2020 அன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • கே.எஸ்.ரெட்டி குழு (Dr K S Reddy Committee) : இந்தியாவில் மனித உரிமைகளின் மீது கோவிட் - 19 நோய்ப்பரவல் சூழலின் தாக்கம் பற்றி ஆராய கே.எஸ்.ரெட்டி தலைமையில் 11 உறுப்பினர் வல்லுநர் குழுவை தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC) ) அமைத்துள்ளது.
  • இந்தியாவில் எம்.சி.ஏ., (Master of Computer Application -MCA) படிப்பு காலம், மூன்றாண்டில் இருந்து, இரண்டு ஆண்டாக குறைக்கப்பட்டுள்ளது.
  • ”நிலையான வளர்ச்சி அறிக்கை 2020” (Sustainable Development Report 2020) ல் இந்தியா 117 வது இடத்தைப் பெற்றுள்ளது. ‘ நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளும் கோவிட்-19 ம்’ ( ‘The Sustainable Development Goals and Covid-19) என்ற தலைப்பில் Cambridge University Press வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையில் முதல் ஐந்து இடங்களை முறையே ஸ்வீடன், டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ் மற்றூம் ஜெர்மனி நாடுகள் பெற்றுள்ளன.
  • அரியானாவில் தனியார் பணிகளில் இளைஞர்களுக்கு 75% இடஒதுக்கீடு அளிக்கும் வரைவு மசோதாவுக்கு அம்மாநில அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டது.
  • ”இந்தியா குளோபல் வீக் 2020” (India Global Week 2020) இணையவழி மாநாடு : இந்திய பொருளாதாரத்தின் வளா்ச்சிக்கான உலகளாவிய வாய்ப்புகளை உறுதிப்படுத்தும் விதமாக, பிரிட்டன் தலைநகா் லண்டனில் ”இந்தியா குளோபல் வீக்” என்ற தலைப்பிலான பொருளாதார மாநாடு 9-11 ஜூலை 2020 தினங்களில் நடைபெறுகிறது. இந்நிகழ்வில் இந்தியப் பிரதமா் நரேந்திர மோடி காணொலி முறையில் பங்கேற்க உள்ளாா்.பிரிட்டனில் செயல்படும் இந்தியா- இன்க் என்ற அமைப்பு, 'இந்தியா குளோபல் வீக்' எனும் இந்த பொருளாதார மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
  • முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவற்றை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து மத்திய அரசு 7-7-2020 அன்று நீக்கியுள்ளது. முக கவசம் மற்றும் சேனிட்டைசர் ஆகியவை பொதுமக்களுக்கு தடையின்றி கிடைக்க செய்வற்காக அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955ன்படி மார்ச் 2020 ல் இந்த இரு பொருட்களையும் அந்த பட்டியலில் மத்திய அரசு சேர்த்தது. 100 நாட்களுக்கு இந்த நடைமுறை இருக்கும் என்றும் தெரிவித்தது. இதனால் பதுக்கலில் அவை சிக்காமல் மக்களுக்கு சென்ற சேர வழிவகுத்தது.தற்போது இப்பொருட்களின் விநியோகம் தங்கு தடையின்றி நடைபெறுவதால் அவை அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.
  • அஸ்ஸாம் மாநிலத்திலுள்ள ‘டேகிங் பட்காய் வனவிலங்கு சரணாலயத்தை (Dehing Patkai Wildlife Sanctuary) “தேசிய வனவிலங்கு பூங்கா” (National Park) வாக தரம் உயர்த்த அம்மாநில அரசு முடிவெடுத்துள்ளது.

வெளிநாட்டு உறவுகள்

  • இந்தியாவின் உதவியுடன் நேபாள நாட்டில் கட்டப்பட்ட ”ஸ்ரீ சப்த்மாய் குருகுல சமஸ்கிருத பாடசாலை” (‘Shree Saptmai Gurukul Sanskrit Vidhyalaya) 6 ஜீலை 2020 அன்று வீடியோ கான்ஃபெரன்ஸ் மூலம் திறந்து வைக்கப்பட்டது.
  • ஆப்கானிஸ்தான் நாட்டின் நான்கு மாகாணங்களில் கல்வி உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான ஐந்து ஒப்பந்தங்களில் இந்தியாவும் ஆப்கானிஸ்தானும் 5-7-2020 அன்று கையெழுத்திட்டன.

சர்வதேச நிகழ்வுகள்

  • ‘ஒஃபேக் 16’ (Ofek 16) என்ற புதிய உளவு செயற்கைக்கோளை இஸ்ரேல்  நாடு  ஷாவிட் (Shavit rocket) ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
  • உலக சுகாதார அமைப்பிலிருந்து அமெரி்க்கா விலகுவதாக அதிபர் டிரம்ப் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.இது தொடர்பாக ஐ.நா. பொதுச்செயலர் அன்ட்டோனியோ குட்டரசிற்கு 6-7-2020 அன்று அமெரிக்கா அனுப்பிய கடிதத்ததில் உலக சுகாதார அமைப்பில் இருந்து அமெரிக்கா விலகிக்கொள்வதாக அறிவித்துள்ளது. ஐ.நா.வின் நடைமுறைப்படி 2021 ஆம் ஆண்டு ஜூலை 6-ம் தேதி ( 1 ஆண்டுகள்) தான் வெளியேற்ற நடைமுறை அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வரும்.
    • கூ.தக : 7 ஏப்ரல், 1948 ல் தொடங்கப்பட்ட உலக சுகாதார நிறுவனம், சுவிட்சர்லாந்து நாட்டின் ஜெனீவா நகரை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இது ஐ.நா.சபையின் துணை அமைப்பாகும். உலகளவிலான சுகாதார விவகாரங்களை இந்த அமைப்பு கையாள்கிறது. இந்தியா உள்பட 194 நாடுகள் இதில் உறுப்பினர்களாக உள்ளன.
  • இந்தியாவை தொடர்ந்து ஹாங்காங்கிலும் டிக்டாக் செயலியின் பயன்பாடுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
  • அமெரிக்காவில் மூளையைத் தின்னும் அமீபா நோய் : அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் ”நெக்லேரியா பவுலேரி” (Naegleria fowleri) என்ற மிக நுண்ணிய அமீபாவால் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மூக்கு வழியாக, தண்ணீர் மூலம் உடலில் நுழையும் இந்த அமீபா மூளையில் தொற்றினை உண்டாக்கினால், உயிரிழப்பு ஏற்படும் வாய்ப்பே அதிகம் எனக் கூறப்பட்டுள்ளது.

நியமனங்கள்

  • இங்கிலாந்து - இந்தியா வர்த்தக கவுண்சிலின் (UK India Business Council(UKIBC)) தலைமையேற்கும் முதலாவது இந்தியாவைப் பூர்வீகமாகக் கொண்ட நபர் எனும் பெருமையை ஜெயந்த் கிருஷ்ணா (Jayant Krishna) பெற்றுள்ளார். இவர் 3-8-2020 முதல் அந்த பொறுப்பை ஏற்கவுள்ளார்.
  • மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) உறுப்பினராக ‘ஸ்டார்ட் அப் வில்லேஜ்’ (Startup Village) நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரி மற்றும் ‘Re-think Foundation’ எனும் நிறுவனத்தின் நிறுவனர் சிஜோ கருவில்லா ஜார்ஜ் (Sijo Kuruvilla Georg) நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக : மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கைக்கான வல்லுநர் குழுவின் (Central Government’s Expert Committee on Science and Technology Policy) தலைவர் - ஹரேஷ் மிட்டல் (Harkesh Mittal )
  • புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சர்வதேச நிதி சேவைகள் மைய ஆணையத்தின் (International Financial Services Centre Authority(IFSCA)) முதல் தலைவராக இஞ்செட்டி ஸ்ரீநிவாஸ் (Injeti Srinivas) 6-7-2020 அன்று நியமிக்கப்பட்டுள்ளார்.
    • கூ.தக. : இவ்வமைப்பின் தலைமையிடம் குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ளது.

முக்கிய தினங்கள்

  • உலக விலங்குவழிப் பரவும் நோய்கள் தினம் (”World Zoonoses Day 2020”) - ஜீலை 6
  • சரக்கு மற்றும் சேவை வரி தினம் (Goods and Service Tax(GST) day) - ஜீலை 1 (1-7-2017 முதல் ஜி.எஸ்.டி வரி முறை இந்தியாவில் அமல்படுத்தப்பட்டதன் நினைவாக அனுசரிக்கப்படுகிறது)

அறிவியல் & தொழில்நுட்பம்

  • ”செல்ஃப் ஸ்கேன்” (“SelfScan”) என்ற பெயரில் சீன செயலியான “கேம் ஸ்கேனருக்கு” மாற்றாக இந்தியாவில் தயாரிக்கப்பட்ட மொபைல் செயலியை மேற்கு வங்க மாநில அரசில் தகவல் தொழில்நுட்பத் துறை உருவாக்கியுள்ளது.

புத்தகங்கள் / ஆசிரியர்கள்

  • “Getting Competitive: A Practitioner’s Guide for India” என்ற புத்தகத்தின் ஆசிரியர் - RC பார்கவா (R C Bhargava)
  • ‘Overdraft: Saving the Indian Saver’ என்ற புத்தகத்தின் ஆசிரியர் - உர்ஜித் பட்டேல் (ரிசர்வ் வங்கி முன்னாள் கவர்னர்)
  

Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!