உஜ்வாலா 2.0 (Ujjwala 2.0 - Pradhan Mantri Ujjwala Yojana - PMUY) திட்டத்தை பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 10, 2021 அன்றுஉத்தரப் பிரதேசத்தின் மஹோபாவிலிருந்து தொடங்கி வைத்தார்.
உஜ்வாலா 1.0 முதல் உஜ்வாலா 2.0 வரையிலான பயணம்:
கடந்த 2016-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட உஜ்வாலா 1.0 திட்டம், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 5 கோடி பெண் உறுப்பினர்களுக்கு சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க இலக்கு நிர்ணயித்தது. இதையடுத்து ஏப்ரல் 2018-இல், கூடுதலாக ஏழு பிரிவுகளைச் (பட்டியலின/பட்டியல் பழங்குடி, பிரதமரின் ஆவாஸ் யோஜனா, அந்தியோதயா அன்ன யோஜனா, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவுகள், தேயிலை தோட்டம், வனப் பகுதிகளில் வசிப்பவர்கள், தீவுகள்) சேர்ந்த பெண்களுக்கும் இந்தத் திட்டத்தில் பலன்கள் நீட்டிக்கப்பட்டது. மேலும், திட்டத்தின் இலக்கு 8 கோடி சமையல் எரிவாயு இணைப்புகளாக மாற்றியமைக்கப்பட்டது. இந்த இலக்கு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு 7 மாதங்கள் முன்பே, ஆகஸ்ட் 2019-இல் எட்டப்பட்டது.
நிதியாண்டு 21-22-க்கான நிதிநிலை அறிக்கையில், பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் முதற்கட்டத்தில் கொண்டுவரப்படாத குறைந்த வருமானம் உடைய குடும்பங்களுக்கு வைப்புத்தொகை இல்லாமல் கூடுதலாக ஒரு கோடி சமையல் எரிவாயு இணைப்புகளை வழங்க (உஜ்வாலா 2.0 கீழ்) திட்டமிடப்பட்டுள்ளது.
வைப்புத்தொகை இல்லாத சமையல் எரிவாயு இணைப்புடன், பயனாளிகளுக்கு முதல் மறு நிரப்புதல் மற்றும் சூடேற்றும் தட்டும் உஜ்வாலா 2.0 திட்டத்தில் இலவசமாக வழங்கப்படும். மேலும், இதில் சேர்வதற்கான நடைமுறைகளுக்கு குறைந்தபட்ச காகித பயன்பாடே தேவைப்படும்.
உஜ்வாலா 2.0 திட்டத்தில் புலம்பெயர் தொழிலாளர்கள் சேர்வதற்கு ரேஷன் அட்டைகள் அல்லது முகவரி ஆவணங்களை சமர்ப்பிக்கத் தேவையில்லை. ‘குடும்ப உறுதி ஆவணம்' மற்றும் ‘முகவரி ஆதாரத்திற்கு’ சுய வாக்குமூலமே போதுமானது.
நன்றி : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1743832
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.