Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை வெளிப்படையான விவாதத்துக்கு ( High-level Open Debate) பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையேற்பு

 ‘‘கடல்சார் பாதுகாப்பு அதிகரிப்பு: சர்வதேச ஒத்துழைப்புக்கான விஷயம்’’  (‘Enhancing Maritime Security – A Case for International Cooperation’ ) குறித்த ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் உயர் நிலை  வெளிப்படையான விவாதத்துக்கு  ( High-level Open Debate) பிரதமர் திரு நரேந்திர மோடி ஆகஸ்ட் 9ம் தேதி மாலை 5.30 மணிக்கு காணொலி காட்சி மூலம் தலைமை தாங்கினார்.  அப்போது, கடல்சார் பாதுகாப்புக்காக 5 கொள்கைகளை மோடி கோடிட்டுக்காட்டினார். அவையாவன, 

முறையான கடல் வர்த்தகத்துக்கான தடைகளை நீக்க வேண்டும்.

இயற்கை பேரழிவுகள் மற்றும் அரசு சாரா கடல் அச்சுறுத்தல்களை கூட்டாக எதிர்த்து முறியடிக்க வேண்டும். 

கடல்சார் சூழல் மற்றும் பெருங்கடல்களைப் பாதுகாக்க வேண்டும்.

கடல் வணிகத்திற்கான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.

நாடுகளுக்கு இடையேயான கடல்சார் சர்ச்சைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு காண வேண்டும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot