பள்ளிக் கல்விக்கான முழுமையான கல்வி (சமக்ர சிக்ஷா / (Samagra Shiksha-2) ) திட்டத்தை 2021 ஏப்ரல் 1ம் தேதி முதல் 2026 மார்ச் 31ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர, மத்திய அமைச்சரவை 4-8-2021 அன்று ஒப்புதல் வழங்கியுள்ளது.
மத்திய அரசின் பங்கு ரூ. 1,85,398.32 கோடி உட்பட இத்திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.2,94,283.04 கோடியாக இருக்கும்.
அரசு மற்றும் அரசு உதவி பெறும் 1.16 மில்லியன் பள்ளிகள், 156 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் 5.7 மில்லியன் ஆசிரியர்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும்.
கூ.தக. : மத்திய அரசு பள்ளிக் கல்வியில் சமக்ர சிக்ஷா என்ற ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தை 2018 ஆம் ஆண்டு தொடங்கியது. இத்திட்டம் அதற்கு முன்பு அமலில் இருந்த அனைவருக்கும் கல்வித் திட்டம் (Sarva Shiksha Abhiyan), ராஷ்ட்ரீய மத்யமிக் சிக்ஷா அபியான் (RMSA), ஆசிரியர் கல்வி (Teacher Education) ஆகியவற்றை உள்ளடக்கி, மழலையர் கல்வி, தொடக்கக் கல்வி, உயர்நிலைக் கல்வி, மேல்நிலைக் கல்வி அனைத்து நிலைகளிலும் தொடர் கல்வி முறைக்கு வழிவகுக்கும் வகையில் தொடங்கப்பட்டது.
குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் 2009 (Right of Children to Free and Compulsory Education (RTE) Act, 2009) மற்றும் அரசியலமைப்பு சட்டப் பிரிவு 21A வை நிறைவேற்றும் நோக்கைக் கொண்ட இந்த திட்டம் ஐ.நா.வின். கல்விக்கான நிலையான மேம்பாட்டு இலக்குக்கு 4.1 மற்றும் 4.5 (Sustainable Development Goal 4.1, 4.5) தகுந்தபடி உள்ளது.
இந்த திட்டத்திற்கான நிதியுதவி மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கிடையே, வடகிழக்கு மற்றும் இமாலய மாநிலங்களுக்கு 90:10 எனவும் , மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 60:40 எனவும் சட்டமன்றம் இல்லாத யூனியன் பிரதேசங்களுக்கு 100% மத்திய அரசு நிதியுதவி எனவும் இருக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.