- மகாகவி பாரதியாரின் நினைவைப் போற்றும் வகையில், அவரது நினைவு நாளான செப்டம்பர் 11 ஆம் தேதி 'மகாகவி நாளாக' கொண்டாடப்படும்.
- பாரதியின் நினைவு நாளில் மாநில அளவில் மாணவர்களுக்கு போட்டிகளை நடத்தி இளங்கவிஞர் விருது வழங்கப்படும் எனவும், பாரதியாரின் பாடல்கள், கட்டுரைகளைத் தொகுத்து 'மனதில் உறுதி வேண்டும்' என்ற புத்தகமாக 37 லட்சம் மாணவர்களுக்கு வழங்கப்படும் .
- பாரதியாரின் நூல்கள் மற்றும் அவரைப் பற்றிய ஆய்வு நூல்கள் அனைத்தையும் தொகுத்து, எட்டையபுரம் மற்றும் திருவல்லிக்கேணியில் உள்ள பாரதியார் நினைவு இல்லங்களிலும், சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்திலும், மதுரையில் அமைய உள்ள கலைஞர் நினைவு நூலகத்திலும் வைப்பதற்கு 'பாரதியியல்' என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.
- உலகத் தமிழ்ச் சங்கங்களை ஒருங்கிணைத்து பாரதி குறித்த நிகழ்வுகள் 'பாரெங்கும் பாரதி' என்ற தலைப்பில் நடத்தப்படும்.
- திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் பாரதியார் பெயரில் ஆய்விருக்கை அமைக்கப்படும்.
- உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டைப் பாராமரிக்க அரசின் சார்பில் நிதியுதவி வழங்கப்படும்.
- பெண் கல்வியையும், பெண்களிடம் துணிச்சலையும் வலியுறுத்திய மகாகவி பாரதியின் பெயர், ஊரக வளர்ச்சித்துறையில் செயல்படுத்தப்படவுள்ள மகளிர் சுயஉதவிக் குழுக்கள் வாழ்வாதாரப் பூங்காவிற்கு ‘மகாகவி பாரதியார் வாழ்வாதாரப் பூங்கா’ எனப் பெயர் சூட்டப்படும்.
Home
1
மகாகவி பாரதியின் நூற்றாண்டு(1921-2021) நினைவு நாளையொட்டி ( 11-9-2021 ) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்
மகாகவி பாரதியின் நூற்றாண்டு(1921-2021) நினைவு நாளையொட்டி ( 11-9-2021 ) தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்புகள்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.