கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் ரூ.50,000 நிவாரணம் அளிக்கும் - மத்திய அரசு அறிவிப்பு
கரோனா பாதிப்பால் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு மாநில அரசுகள் ரூ.50,000 நிவாரணம் அளிக்கும் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இந்த நிவாரணத் தொகை தொற்றின் முதல் அலை, இரண்டாம் அலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு மட்டுமின்றி எதிா்காலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழப்போரின் குடும்பத்தினருக்கும் அல்லது அதுதொடா்பாக மறு அறிவிப்பு வெளியிடப்படும் வரையிலும் வழங்கப்படும்.நிவாரணத் தொகையை பரிவா்த்தனை செய்யும் பணிகளை மாவட்ட பேரிடா் மேலாண்மை ஆணையம்/ மாவட்ட நிா்வாகம் மூலம் மேற்கொள்ள என்டிஎம்ஏ வழிகாட்டுதல் வழங்கியுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக