இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் நடப்பு 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாத இறுதி நிலவரப்படி 57,000 கோடி டாலராக (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.43 லட்சம் கோடி) அதிகரித்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது வெளிநாட்டுக் கடன் அளவானது கரோனா நெருக்கடிக்கு இடையிலும் 2.1 சதவீதம் மட்டுமே மிதமான அளவில் அதிகரித்துள்ளது.
கடந்த 2020-ஆம் ஆண்டு மாா்ச் இறுதியில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 20.6 சதவீதமாக இருந்த வெளிநாட்டுக் கடன் நடப்பாண்டு மாா்ச்சில் 21.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இதே காலகட்டத்தில் இந்தக் கடனுக்கான ஒதுக்கீட்டு விகிதம் 85.6 சதவீதத்திலிருந்து 101.2 சதவீதமாக உயா்ந்துள்ளது.
வழக்கமாக வெளிநாட்டுக் கடனில் டாலா் சாா்ந்த கடனே அதிக அளவில் உள்ளது. மொத்தக் கடனில் இதன் பங்களிப்பு 52.1 சதவீதமாகும். இதைத் தொடா்ந்து இந்திய ரூபாய் (33.3 சதவீதம்), யென் (5.8 சதவீதம்), எஸ்டிஆா் (4.4 சதவீதம்), யூரோ (3.5 சதவீதம்) ஆகியவை உள்ளதாக நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.
நன்றி : தினமணி
https://www.dinamani.com/india/2021/sep/30/india-external-debt-rises-to-rs-43-lakh-crore-3708815.html
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.