ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில் 5 ஆடுகள் வழங்கும் தமிழக அரசின் திட்டம்
ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக மாற்றும் வகையில், 38 ஆயிரம் பெண்களுக்கு தலா 5 ஆடுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டு அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், ஏழ்மை நிலையில் உள்ள கணவனை இழந்த, கைவிடப்பட்ட, ஆதரவற்ற பெண்களுக்கு செம்மறியாடுகள், வெள்ளாடுகள் வழங்க 75 கோடியே 63 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலங்கள் இல்லாத விவசாய தொழிலாளர்களுக்கு இந்த திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதரவற்ற பெண்கள் 60 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும் என்றும், குறிப்பாக ஏற்கனவே ஆடுகள், மாடுகள் வைத்திருக்க கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. நன்றி : தினத்தந்தி
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக