பள்ளி, கல்லூரி மற்றும் அரசு ஆவணங்களில் ஒவ்வொருவரின் பெயருக்கு முன்பாக உள்ள எழுத்து ('இனிஷியல்') தமிழிலேயே இடம்பெற வேண்டுமென தமிழக அரசாணையை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணையில், முதல்-அமைச்சர் முதல் கடைநிலை ஊழியர் வரை அனைத்து அரசு அலுவலர்கள், பணியாளர்கள் அரசு ஆவணங்களில் முன்னெழுத்தையும், கையொப்பத்தையும் தமிழில் இடவேண்டும் என ஆணையிடப்பட்டுய்ள்ளது. தமிழிலேயே கையொப்பம் இடவும், அதில் முன்னெழுத்துக்களையும் தமிழிலேயே எழுத வேண்டும் என ஏற்கனவே பிறப்பிக்கப்பட்ட அரசாணைகள் மீணடும் வலியுறுத்தப்படுகின்றன. மேலும், பள்ளி, கல்லூரி மாணவர்கள் கையொப்பமிடும் சூழ்நிலைகள் அனைத்திலும், தமிழ் முன்னெழுத்துடனே கையொப்பமிட வேண்டும் எனவும், தலைமை செயலகம் முதல் கடைநிலை அரசு அலுவலகம் வரை, அனைத்து அரசு துறை ஆணைகள் மற்றும் ஆவணங்களில், பொது மக்கள் பெயர்களை குறிப்பிடும் போது, முன்னெழுத்துகள் உட்பட பெயர் முழுமையையும், தமிழிலேயே பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூ.தக. :
1956-ம் ஆண்டு இயற்றப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்ட தமிழ் ஆட்சிமொழி சட்டத்தின் முதன்மைப் பணியாக அரசு அலுவலர்கள், பணியாளார்கள் அனைவரும் தமிழிலேயே கையெழுத்திட வேண்டும் என்று 21.6.1978 அன்று ஆணையிடப்பட்டுள்ளது.
மேலும், தங்கள் பெயர்களின் தலைப்பெழுத்துகளை (தந்தை, தாய், ஊர் பெயர்களின் இனிஷியல்), தங்களின் பெயர்களுக்கும் முன் தமிழில் மட்டுமே எழுத வேண்டும் என்று 16.9.1998 அன்று உத்தரவிடப்பட்டது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.