தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகள் - பிரதமர் மோடி அவர்கள் திறந்து வைக்கிறார்
தமிழகத்தில் 11 புதிய மருத்துவக்கல்லூரிகளை பிரதமர் நரேந்திரமோடி 12-1-2022 அன்று காணொலி காட்சி வழியாக திறந்துவைக்கிறார். தமிழகத்தில் திருவள்ளூர், அரியலூர், கள்ளக்குறிச்சி, திருப்பூர், நீலகிரி, நாகப்பட்டினம், நாமக்கல், கிருஷ்ணகிரி, திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் ஆகிய 11 மாவட்டங்களில் மொத்தம் ரூ.4 ஆயிரம் கோடி செலவில் புதிதாக அரசு மருத்துவ கல்லூரிகள் கட்டப்பட்டுள்ளன. இதில், மத்திய அரசு வழங்கிய நிதி ரூ.2,145 கோடி அடங்கும் . ஒவ்வொரு மருத்துவ கல்லூரியிலும் சுமார் 100 முதல் 150 மாணவர் வரை மொத்தம் 1,450 மாணவர்கள் கூடுதலாக மருத்துவ கல்வி படிக்கும் வசதி உருவாக்கப்பட்டுள்ளது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக