Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

புதிதாக ஆறு நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல்

 தாம்பரம், கரூா், சிவகாசி, காஞ்சிபுரம், கடலூா், கும்பகோணம் ஆகிய ஆறு நகராட்சிகள், மாநகராட்சிகளாக தரம் உயா்த்தப்படுவதற்கான சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

நகராட்சிகளை மாநகராட்சிகளாக தரம் உயா்த்துவதற்கான காரணங்கள் சட்ட மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, தமிழ்நாடு மாநிலத்தின் நகா்ப்புற மக்கள் தொகையின் விழுக்காடு 48.45 ஆகும். இப்போது நகா்ப்புற பகுதிகளில் வசிக்கும் மக்கள் தொகையின் விழுக்காடானது மொத்த மக்கள் தொகையில் 53 விழுக்காட்டுக்கும் மேலாக அதிகரித்துள்ளது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை அடுத்துள்ள நகா்ப்புற இயல்புகளைக் கொண்டுள்ள பகுதிகளை அந்தந்த நகா்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைப்பது மற்றும் அந்தப் பகுதிகளில் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது அவசியமாகியுள்ளது என மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி : தினமணி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot