போக்குவரத்து விதிமீறலுக்கான புதிய அபராதம் விதிக்கும் புதிய மோட்டார் வாகன சட்டம் சென்னையில் 26.10.2022 அன்று முதல் அமலுக்கு வந்தது. கடந்த 2019-ம் ஆண்டு மத்திய அரசு கொண்டு வந்த புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தின்படி, புதிய நடைமுறையின்படி 'ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் செல்வோர்களுக்கு அபராத தொகை ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், சிக்னலை மதிக்காமல் வாகனங்களில் செல்வோர்களுக்கு ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், செல்போன் பேசியபடி வாகனத்தை ஓட்டுபவர்களுக்கு ரூ.1,000, காரில் 'சீட்' பெல்ட் அணியாமல் சென்றால் ரூ.100-லிருந்து ரூ.1,000 ஆகவும், 'லைசென்சு' இல்லாமல் வாகனங்களை ஓட்டினால் ரூ.500-லிருந்து ரூ.5 ஆயிரமாகவும், போக்குவரத்துக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் (நோ பார்க்கிங்) ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும், தடை செய்யப்பட்ட சாலையில் (நோ என்ட்ரி) வாகனங்களை ஓட்டினால் ரூ.100-லிருந்து ரூ.500 ஆகவும் அதிகரிக்கப்பட்டது. இதில் மது போதையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கும், பின்னால் அமர்ந்து செல்வோர்களுக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதிப்பு அமலுக்கு வந்தது.
கூ.தக. : தமிழ்நாட்டில் 2021-ம் ஆண்டு மட்டும் 11,419 சாலை விபத்துகள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண
காப்பகத்தின் அறிக்கை தெரிவிக் கிறது. சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு 1,026 பேர் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
போக்குவரத்து விதிகளை மீறுவது, மது
அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவது உள்ளிட்டவையே இதற்கு முக்கிய காரணமாக உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.