காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் பொருட்டு பல்வேறு திருப்புமுனை முயற்சிகளை மேற்கொள்வதற்காக தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமை தமிழக இயக்கம் மற்றும் தமிழ்நாடு சதுப்புநில இயக்கம் ஆகிய மூன்று முக்கிய இயக்கங்களை தமிழ்நாடு அரசு ஏற்படுத்தியுள்ளது. காலநிலை செயல்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல, தமிழ்நாடு பசுமை காலநிலை மாற்ற நிறுவனம் என்னும் சிறப்பு செயல்பாடு நிறுவனத்தை தமிழகம் அமைத்துள்ளது.
தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கத்திற்கு கொள்கை வழிகாட்டுதலை
வழங்கவும், காலநிலை மாற்றத்திற்கான
தகவமைப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகளை தணிப்பது தொடர்பான
ஆலோசனைகளை வழங்கவும்,
தமிழ்நாடு காலநிலை மாற்ற நிர்வாகக் குழு
தமிழ்நாடு மாநில காலநிலை மாற்ற செயல்திட்டத்தினை உருவாக்கி
அதனை செயல்படுத்துவதற்கான உரிய வழிகாட்டுதல்களை வழங்கும் பொருட்டு தமிழ்நாடு
காலநிலை மாற்ற நிர்வாகக் குழுவினை அமைக்க அரசு முடிவு செய்துள்ளது இந்த நிர்வாகக் குழுவிற்கு தமிழக முதல்வர்
ஸ்டாலின் தலைவராக செயல்படுவார். உறுப்பினர்களாக நிதித்துறை, தொழில்துறை, வனத்துறை, கால
நிலை மாற்றத்துறை ஆகிய துறைகளின் அமைச்சர்கள், பொருளாதார நிபுணர் மாண்டேக் சிங் அலுவாலியா, இன்போசிஸ் நிறுவன தலைவர் நந்தன் எம்.நிலக்கேனி, ஐக்கிய நாடுக சுற்றுச்சூழல் திட்ட 6வது செயல் இயக்குனர் எரிக் சோலிகம், நிலையான நீடித்த கடற்கரை மேலாண்மை மையத்தல் நிறுவனர் ரமேஷ்
ராமசந்திரன், பூவுலகின் நண்பர்கள்
அமைப்பைச் சேர்ந்த சுந்தர்ராஜன், ராம்கோ
சமூக சேவைகள் தலைவர் நிர்மலா ராஜா, தலைமை செயலாளர், திட்டக் குழு துணைத் தலைவர், கால நிலை மாற்றத்துறை, தொழில்துறை, நகராட்சி நிர்வாக துறை, நிதித்துறை, எரிசக்தி துறை, ஊரக வளர்ச்சி துறை, வீட்டு வசதி துறை, கால் நடை, மீன்வளம்
மற்றும் பால்வளத்துறை, விவசாயத்
துறை ஆகிய துறைகளின் செயலாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.