“நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி - 4.0 (Industry 4.0) மாநாடு
“நாளையை நோக்கி இன்றே - தலை நிமிர்ந்த தமிழ்நாடு” எனும் தொழில் வளர்ச்சி - 4.0 (Industry 4.0) மாநாட்டில்,
டிட்கோ மற்றும் சீமென்ஸ் நிறுவனங்கள் இணைந்து, 251.54 கோடி ரூபாய் செலவில் டைடல் பார்க்கில் அமைத்துள்ள தமிழ்நாடு ஸ்மார்ட் மற்றும் மேம்பட்ட உற்பத்தி மையத்தை (TANSAM) முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் 11.8.2022 அன்று திறந்து வைத்து பார்வையிட்டார்.
டிட்கோ மற்றும் GE ஏவியேஷன் நிறுவனங்கள் இணைந்து, ரூபாய் 141 கோடி முதலீட்டில் உருவாக்கியுள்ள, 3D அச்சிடுதல் தொழில் நுட்பத்தில், உலகத் தரம் வாய்ந்த சேர்க்கை உற்பத்திக்கான (Additive Manufacturing Centre) தமிழ்நாடு மேம்பட்ட உற்பத்தி சிறப்பு மையத்தை (TAMCOE) முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து பார்வையிட்டார்.
தமிழ்நாடு விண்வெளி மற்றும் பாதுகாப்புக் கொள்கை 2022-யை வெளியிட்டார்.