Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கோவையில் இயங்கி வந்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககம் சென்னைக்கு மாற்றம்

 கோவையில் இயங்கி வந்த விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்று இயக்ககம் சென்னைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

அங்கக விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை சந்தைப்படுத்தி, அங்ககச்சான்று பெறுவதற்கு தனியாரிடம் அதிக கட்டணம் செலுத்த வேண்டியுள்ளது. இதனை தவிர்க்க, தேசிய அளவில் அங்கீகரிக்கப்பட்ட பங்கீட்டு உத்தரவாத திட்டத்தினை (Participatory Guarantee System - PGS) விவசாயிகளுக்கு தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.  இத்திட்டத்தின் மூலம் அங்கக விவசாயிகள் எவ்வித கட்டணமும் செலுத்தாமல் இலவசமாக தங்களின் அங்ககப் பண்ணைகளுக்கு அங்ககச்சான்று பெற்று கொள்ளலாம். 

2022-23 ஆம் ஆண்டிற்கான வேளாண் நிதிநிலை அறிக்கையில் நஞ்சில்லா உணவுப்பொருட்களை விளைவிக்கும் அங்கக விவசாயிகளுக்கு, அவர்களது விளைப்பொருட்களிலுள்ள நச்சு பொருட்களின் தன்மையை அறிந்து அதன் தரத்தை உறுதிப்படுத்தும் வகையில், எஞ்சிய நச்சு மதிப்பீடு பரிசோதனை செய்வதற்கான கட்டணத்தை முழு மானியத்தில் வழங்கும் பொருட்டு, ரூபாய் பன்னிரண்டு இலட்சத்து ஐம்பதாயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த அறிவிப்பினை பின்பற்றி, பகுப்பாய்வு மாதிரி ஒன்றிற்கு ஆகும் கட்டணத் தொகை ரூ.4,720/- (ரூபாய் நான்காயிரத்து எழுநூற்று இருபது மட்டும்) முழு மானியமாக அங்கக விவசாயிகளுக்கு அரசால் இவ்வாண்டு வழங்கப்படுகிறது. 

தகவல் ஆதாரம் : TN DIPR  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot