Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

"தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டம்” தொடக்கம்

 தமிழ்நாட்டில் உள்ள தூய்மைப் பணியாளர்களின் நலன் காக்கும் "தூய்மைப் பணியாளர் மேம்பாட்டுத் திட்டத்தை"   முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள்,  நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மதுரை மாநகராட்சி அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 9.12.2022 அன்று தொடங்கி வைத்தார்.   தூய்மைப் பணியாளர்கள் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்து, 53,301 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கிடும் அடையாளமாக 5 தூய்மைப் பணியாளர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்களை வழங்கினார்.   


இத்திட்டத்தின் மூலம் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும் 18,859 நிரந்தர பணியாளர்கள் மற்றும் 34,442 தற்காலிக ஒப்பந்தப் பணியாளர்கள், என மொத்தம் 53,301 பணியாளர்கள் மட்டுமல்லாமல் தனியார் துறைகள், நிறுவனங்கள் மற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டுள்ள அனைத்து முறைசாரா பணியாளர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைவார்கள். 


இத்திட்டத்தினை அகமதாபாத்தில் உள்ள நகர்ப்புற மேலாண்மை மையத்தின் (Urban Management Centre) உதவியுடன் சிறப்பாக செயல்படுத்திட திட்டமிடப்பட்டுள்ளது.  நகர்ப்புற மேலாண்மை மையத்தின் உதவியுடன் தமிழ்நாட்டில் கழிவு மற்றும் கசடு தொடர்புடைய பணிகளில் ஈடுபட்டிருக்கும் தூய்மைப் பணியாளர்களின் பாதுகாப்பை மேலும் மேம்படுத்த முன்னோடி திட்டமாக (Pilot basis) சென்னை மாநகராட்சியில் மண்டலம்-6  திரு.வி.க. நகரிலும், மதுரை மாநகராட்சி, புதுக்கோட்டை மற்றும் பொள்ளாச்சி நகராட்சிகள், சேரன் மகாதேவி பேரூராட்சி ஆகிய 5 நகர்புர உள்ளாட்சி அமைப்புகளை தேர்ந்தெடுத்து தூய்மைப் பணியாளர்களை கண்டறிந்து அவர்களுக்கான திட்டங்களை செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.


 இத்திட்டத்தை மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் முதற்கட்டமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஐந்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளில் தொடங்கி வைத்தார்.  இத்திட்டம் பின்னர், படிப்படியாக தமிழ்நாட்டில் உள்ள மற்ற அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் செயல்படுத்தப்படவுள்ளது.


 இத்திட்டத்தின் மூலம் மாநிலமெங்கும் உள்ள தூய்மைப் பணியாளர்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உரிய திறன் பயிற்சிகள், அவர்களது குழந்தைகளுக்கு முறையான கல்வி வசதி வழங்குதல் மற்றும் மாற்றுத்தொழில் தொடங்க வங்கிகள் மூலம் கடன் உதவி, ஓய்வூதியம், காப்பீடு போன்ற அரசு திட்டங்களை இணைப்பதற்கான வழிமுறைகளும் மேற்கொள்ளப்படும். 

இத்திட்டத்தின் மூலம் தூய்மைப் பணியாளர்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்து, பொருளாதாரம் மேம்பாடு அடையும். 

நன்றி : TN DIPR 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot