Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

இந்திய கடலோரக் காவல்படையில் Mk-III squadron என்ற புதிய படைப்பிரிவு தொடக்கம்

 இந்திய கடலோரக் காவல்படையின் கிழக்குப் பிராந்தியத்தில் ரோந்துப்பணியை வலுப்படுத்துவதற்கான பெரும் ஊக்குவிப்பாக புதிய இலகுரக நவீன ஹெலிகாப்டர் வசதியுடன் கூடிய 840 எம்கே-III (Indian Coast Guard Advanced Light Helicopter (ALH) Mk-III squadron) என்ற புதிய படைப்பிரிவை கடலோர காவல்படை தலைமை இயக்குனர் வி எஸ் பதானியா 30.11.2022 அன்று தொடங்கிவைத்தார். ஹெலிகாப்டர் உற்பத்தியில் தற்சார்பு நிலையை எட்டும் வகையில் மத்திய அரசின் தற்சார்பு இந்தியா என்ற திட்டத்தின் அடிப்படையில் இந்த இலகு ரக ஹெலிகாப்டர் எம்கே3, இந்துஸ்தான் ஏரோநாட்டிகல் நிறுவனத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய படைப்பிரிவு  தமிழ்நாடு, ஆந்திரா மாநிலங்களில் உள்ள பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியில் இந்திய கடலோர காவல்படையின் திறன்களை மேம்படுத்தும்.

 உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ஏஎல்எச் எம்கே-III  என்ற இலகு ரக ஹெலிகாப்டர்கள், மேம்பட்ட ரேடார் மற்றும் எலக்ட்ரோ ஆப்டிகல் சென்சார்கள், சக்தி வாய்ந்த  என்ஜின்கள், முழுமையான கண்ணாடி காக்பிட், உயர்-தீவிர தேடல் விளக்கு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் தகவல் தொடர்பு உபகரணங்கள், தானியங்கி அடையாள அமைப்பு, தேடல் மற்றும் மீட்பு ஹோமர் போன்ற அதிநவீன உபகரணங்களும் இதில் இணைக்கப்பட்டுள்ளன. இது ஹெலிகாப்டரை கடல்சார் உளவுப் பணிகளை மேற்கொள்வதற்கும், கப்பல்களில் இருந்து இரவும் பகலும் இயங்கும் வகையில் நீண்ட  தொலைவில் தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளை மேற்கொள்ளவும் உதவும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot