- புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் 19.9.2023, செவ்வாய்க்கிழமை பிற்பகல் தொடங்கியது. நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரின் முதல் நாளான 18.9.2023 அன்று பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்குப் பிரியாவிடை அளிக்கும் வகையில், கடந்த 75 ஆண்டுகளில் நாடாளுமன்றம் கடந்து வந்த பாதைகள் குறித்த விவாதம் நடைபெற்றது. பழைய நாடாளுமன்ற கட்டடத்தில் 4 ஆயிரம் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
- இதனையடுத்து, பழைய கட்டடத்தின் வளாகத்தில் மாநிலங்களவை மற்றும் மக்களவை உறுப்பினர்கள் இணைந்து குழுப் புகைப்படத்தை 19.9.2023 அன்று காலை எடுத்துக் கொண்டனர்.
- பின், பகல் 12.45 மணியளவில் பழைய நாடாளுமன்ற வளாகத்திலிருந்து புதிய கட்டடத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் மற்றும் எம்பிக்கள் பேரணியாக சென்றனர்.இதனைத் தொடர்ந்து, பகல் 1.15 மணியளவில் மக்களவையில் தேசிய கீதம் இசைக்கப்பட்டு அவைத் தலைவர் ஓம் பிர்லா தலைமையில் முதல் கூட்டம் தொடங்கியது.
- புதிய நாடாளுமன்றத்தில் ஆங்கிலம் உள்பட 23 மொழிகளில் எந்த மொழியில் பேசினாலும் மொழிப்பெயர்த்துக் கொடுக்கும் நவீன வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
- பழைய நாடாளுமன்றத்தில் இறுதி அமர்வு 18.9.2023 அன்று நடைபெற்றது. 19.9.2023 முதல் அனைத்து அமர்வுகளும் புதிய பாராளுமன்றத்திலேயே நடைபெறும்.
புதிய நாடாளுமன்ற கட்டடத்தில் முதல் கூட்டம் (19 செப்டம்பர் 2023)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.