‘ஒரே நாடு, ஒரே தோ்தல்’ குறித்த சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவை மத்திய அரசு 1.9.2023 அன்று அமைத்துள்ளது. இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ராஜ்யசபாவின் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், முன்னாள் நிதி ஆயோக் தலைவர் என்.கே.சிங், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் லோக்சபா பொதுச் செயலாளர் சுபாஷ் சி. காஷ்யப், மற்றும் முன்னாள் தலைமை விஜிலென்ஸ் கமிஷனர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் உறுப்பினர்களாக செயல்படுவர். சிறப்பு அழைப்பாளராக சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்ளுவார். சட்ட விவகார செயலாளர் நித்தன் சந்திரா அதன் செயலாளராக இருப்பார். கூ.தக. : நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள குறைந்தபட்சம் 5 விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது.
கூ.தக. : நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தோ்தலை நடத்துவதற்கு அரசமைப்புச் சட்டத்தில் இடம்பெற்றுள்ள குறைந்தபட்சம் 5 விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டியுள்ளது. நாடாளுமன்ற அவைகளின் பதவிக் காலம் (விதி 83), மக்களவையைக் கலைத்தல் (விதி 85), மாநில பேரவையின் பதவிக் காலம் (விதி 172), பேரவையைக் கலைத்தல் (விதி 174), மாநிலங்களில் குடியரசுத் தலைவா் ஆட்சி (விதி 356) உள்ளிட்டவற்றில் திருத்தங்களைக் கொண்டு வர வேண்டும்.
நன்றி : தினமணி.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.