Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

உச்ச நீதிமன்றத்தின் VVPAT தீர்ப்பு பற்றி . . .

 26.04.2024 அன்று, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (EVM) எண்ணிக்கைக்கு எதிராக  VVPAT சீட்டுகளையும் சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்சநீதிமன்றம் நிராகரித்தது.

ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) தொடர்ந்த இந்த வழக்கில், பின்வரும் மூன்று கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன: 

  1. காகித வாக்குச் சீட்டு (paper ballots) முறைக்குத் திரும்புவது,

  2. VVPAT இயந்திரத்தில் அச்சிடப்பட்ட சீட்டுகளை வாக்காளர்கள் சரிபார்த்து வாக்குப் பெட்டியில் இடுவதற்கான வசதி

  3. VVPAT சீட்டுகளை 100% கையால் எண்ண வேண்டும் மற்றும் மின்னணு முறையிலும் எண்ணப்படவேண்டும் (electronic counting) 


புதிய மாற்றங்கள் என்னென்ன ? 

தேர்தலுக்குப் பிந்தைய சில புதிய நடைமுறைகளைக் கடைப்பிடிக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது.


முதன்முதலில், தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு 45 நாட்களுக்கு குறியீட்டு ஏற்றுதல் அலகுகளை (symbol loading units (SLUs)) சீல் வைக்கவும், சேமிக்கவும் வேண்டும் என உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்துக்கு வழிகாட்டுதல்களை வழங்கியது. குறியீட்டு ஏற்றுதல் அலகுகள் (SLUs) நினைவக அலகுகள் (memory units) ஆகும். அவை முதலில் ஒரு கணினியில் தேர்தல் சின்னங்களை ஏற்றுவதற்கு இணைக்கப்பட்டு, பின்னர் VVPAT  இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்களை உள்ளீடு செய்ய பயன்படுகிறது. இந்த குறியீட்டு ஏற்றுதல் அலகுகள் (SLUs) மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களைப் போலவே திறக்கப்பட்டு, ஆய்வு செய்யப்பட்டு, கையாளப்பட வேண்டும். 

மேலும், தேர்தல் ஆணையம், விண்ணப்பதாரர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் சரிபார்ப்பைப் பெற மீண்டும் முதல் முறையாக அனுமதித்துள்ளது. இரண்டாவது அல்லது மூன்றாவதாக வரும் வேட்பாளர்கள், ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியின் சட்டமன்றப் பகுதியிலும் 5% மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் Burnt Memory Semicontroller-ஐ சரிபார்க்கும்படி கேட்கலாம். வேட்பாளரின் எழுத்துப்பூர்வ கோரிக்கைக்கு பிறகு இந்த சரிபார்ப்பு செய்யப்படும் மற்றும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திர உற்பத்தியாளர்களின் பொறியாளர்கள் குழுவால் மேற்கொள்ளப்படும். 

உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி, வேட்பாளர்கள் அல்லது பிரதிநிதிகள் வாக்குச்சாவடி அல்லது வரிசை எண் மூலம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அடையாளம் காண முடியும். முடிவுகள் அறிவிக்கப்பட்ட 7 நாட்களுக்குள் சரிபார்ப்புக்கான கோரிக்கையை சமர்ப்பிக்க வேண்டும். மேலும், செலவுகளை வேட்பாளர்கள் ஏற்க வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு கண்டறியப்பட்டால் அவர்கள் செலுத்திய செலவினத்தொகை  திரும்ப வழங்கப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது.

உச்சநீதிமன்றம் வழங்கிய பிற பரிந்துரைகள்

  • VVPAT சீட்டுகளை மனிதர்களைக் காட்டிலும் எண்ணும் இயந்திரத்தைப் பயன்படுத்தி எண்ணலாம் என்ற ஆலோசனையை தேர்தல் ஆணையம் "ஆய்வு"  செய்யலாம் என்று உச்சநீதிமன்றம் கூறியது. 

  • VVPAT சீட்டுகளில் பார்கோடு (barcode) அச்சிடப்பட்டிருக்கலாம். இது இயந்திரத்தை எண்ணுவதை எளிதாக்கும் என்று விசாரணையின் போது பரிந்துரைக்கப்பட்டது. இது தொழில்நுட்ப அம்சம் என்பதால் மதிப்பீடு தேவைப்படுவதால், எந்த வகையிலும் கருத்து தெரிவிப்பதைத் தவிர்த்துவிட்டதாகவும் உச்சநீதிமன்றம் கூறியது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot