Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs 10 May 2024

இந்தியா

1950 முதல் 2015 வரையிலான காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் இந்துக்களின் எண்ணிக்கை 7.82 சதவீத சரிவைச் சந்தித்துள்ளது என பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே காலக்கட்டத்தில், முஸ்லிம்கள் எண்ணிக்கை 43.15 சதவீதமும், கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 5.38 சதவீதமும் உயா்வைக் கண்டுள்ளதாகவும் ‘மக்கள்தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு: நாடு தழுவிய பகுப்பாய்வு (1950-2015)’ என்ற தலைப்பிலான அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

  • அதன்படி, நாட்டின் மக்கள்தொகையில் பெரும்பான்மையினரான இந்துக்களின் எண்ணிக்கை, கடந்த 1950 - 2015 காலகட்டத்தில் 84.68 சதவீதத்தில் இருந்து 78.06 சதவீதமாக குறைந்துள்ளது. 

  • அதேநேரம், கடந்த 1950-ஆம் ஆண்டில் நாட்டின் மக்கள்தொகையில் 9.84 சதவீதமாக இருந்த முஸ்லிம்களின் எண்ணிக்கை 2015-ஆம் ஆண்டில் 14.09 சதவீதமாக அதிகரித்துள்ளது. அவா்களின் எண்ணிக்கையில் இது 43.15 சதவீத உயா்வாகும்.

  • மேற்கண்ட காலகட்டத்தில், நாட்டின் மக்கள்தொகையில் கிறிஸ்தவா்களின் எண்ணிக்கை 2.24 சதவீதத்தில் இருந்து 2.36 சதவீதமாகவும், சீக்கியா்களின் எண்ணிக்கை 1.24 சதவீதத்தில் இருந்து 1.85 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. இவை முறையே 5.38%, 6.58% அதிகரிப்பாகும்.

  • சமண மதத்தினரின் எண்ணிக்கை 0.45 சதவீதத்தில் இருந்து 0.36 சதவீதமாகவும், பாா்சி மதத்தினரின் எண்ணிக்கை 0.03 சதவீதத்தில் இருந்து 0.004 சதவீதமாகவும் குறைந்துள்ளது. இவை முறையே 20, 85 சதவீத குறைவாகும்.

தகவல்கள் ஆதாரம் : தினமணி, 10.5.2024 


உலகம்

சீனாவுக்கும் சொ்பியாவுக்கும் இடையே  ‘பரஸ்பர எதிா்கால வளா்ச்சி’க்கான ஒப்பந்தம் 8.5.2024 அன்று மேற்கொள்ளப்பட்டது. சீனாவுடன் ஐரோப்பிய நாடொன்று இத்தகைய ஒப்பந்தமொன்றை மேற்கொண்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.


பொருளாதார நெருக்கடியை சமாளிக்க, மருத்துவப் பயன்பாட்டுக்கு கஞ்சா சாகுபடியை சட்டபூர்வமாக்க பாகிஸ்தான் அரசு முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

  • கஞ்சா சாகுபடி மற்றும் வர்த்தகத்தைக் கண்காணிக்க தனி சட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் இயற்றிய பாகிஸ்தான் அரசு, இதற்கென கஞ்சா கட்டுப்பாடு மற்றும் ஒழுங்குமுறை ஆணையத்தை அமைத்துள்ளது.

  • ஐ.நா சட்டத்தின் படி, ஒரு நாடு கஞ்சா தொடர்பான பொருட்களை உற்பத்தி, வர்த்தகம் செய்ய விரும்பினால், அந்த நாடு கஞ்சா விநியோகச் சங்கிலியைக் கண்காணிக்க ஒரு கூட்டமைப்பைக் கொண்டிருக்க வேண்டும் என்று தெரிவிக்கிறது குறிப்பிடத்தக்கது. 


உலகில் அதிக வெப்பம் பதிவான மாதமாக  ஏப்ரல் 2024 மாதம் இருந்ததாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வானிலை ஆய்வு மைய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

கடந்த 12 மாத வெப்பநிலை சராசரி 1.6 டிகிரி செல்சியஸ் என்று பதிவாகியுள்ளது. இது 2015 பாரிஸ் ஒப்பந்தத்தில் புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலையை 1.5 டிகிரி செல்சியஸ் மிகாமல் தடுக்க வேண்டும் என்ற இலக்கை இது மிஞ்சிவிட்டது.

'பாரிஸ் உடன்படிக்கை' பற்றி :  

  • கடந்த 2015 ஆம் ஆண்டு பிரான்ஸ் நாட்டின் தலைநகர் பாரிஸ் நகரில் கூடிய ஐ.நா. காலநிலை மாநாட்டில் (COP21) 'பாரிஸ் உடன்படிக்கை' (Paris Agreement) உலகின் 195 நாடுகளால் ஒருமனதாக ஏற்கப்பட்டது.

  • இந்த ஒப்பந்தத்தின் படி, 14 டிகிரி செல்சியசாக இருந்த புவி மேற்பரப்பு சராசரி வெப்பநிலை ஒரு டிகிரி செல்சியஸ் அதிகரித்ததன் விளைவாகத்தான் பெருவெள்ளம், அதிவேக சூறாவளி, பெரும் வறட்சி, நோய்கள் அதிகரிப்பு, வேளாண்மை பாதிப்பு, கடல்வள அழிவு என எண்ணற்ற  பாதிப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இது மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற நிலையில், அதை 2 டிகிரி செல்சியஸ், அதாவது 16 டிகிரி என்ற அளவுக்கு செல்லவிடாமல் குறைக்க உறுதி ஏற்கப்பட்டிருக்கிறது. முடிந்தால் இதை 1.5 டிகிரி செல்சியசுக்குள், அதாவது 15.5 டிகிரி செல்சியசுக்குள் கட்டுப்படுத்த முயற்சி செய்வது என்றும் ஐ.நா. காலநிலை மாநாட்டில் தீர்மானிக்கப்பட்டது. 

  • ஆனால், ஏப்ரல் 2024-ல் தொழில்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் நிலவிய சர்வதேச புவி மேற்பரப்பு வெப்ப சராசரியைவிட உயர்ந்து 1.58 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

  • நிலக்கரி, பெட்ரோல், டீசல், எரிவாயு உள்ளிட்ட படிம எரிபொருட்களை மிதமிஞ்சி பயன்படுத்தியதாலும், காடுகளை அழித்ததாலும் வளிமண்டலத்தில் மாசுக்காற்றின் அடர்த்தி அதிகமாகி, பூமியின் மேற்பரப்பு வெப்பநிலை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. 

தகவல் ஆதாரம் :  இந்து தமிழ் திசை, 8.5.2024


வெளிநாட்டு உறவுகள்

இந்திய கடற்படைக் கப்பல்களான தில்லி (Delhi), சக்தி(Shakti), கில்டன் (Kiltan) ஆகியவை 2024, மே  6-ம் தேதி  முதல் 9-ம் வரை சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளன. தென் சீனக் கடலில் இந்திய கடற்படையின் கிழக்கு கடற்படை செயல்பாட்டு நிலைநிறுத்தலின் ஒரு பகுதியாக இந்தப் பயணம் மேற்கொள்ளப்பட்டது. 

பொருளாதாரம்

 "IREDA உலக பசுமை எரிசக்தி நிதி நிறுவனம்  (IREDA Global Green Energy Finance IFSC Limited) :  இந்திய புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மேம்பாட்டு முகமை (Indian Renewable Energy Development Agency Ltd. (IREDA)) குஜராத்தின் கிப்ட் சிட்டியில் அமைந்துள்ள சர்வதேச நிதி சேவை மையத்தில் (International Financial Services Centre (IFSC)) தனது துணை நிறுவனத்தை இணைத்துள்ளது. "IREDA உலக பசுமை எரிசக்தி நிதி நிறுவனம்  (IREDA Global Green Energy Finance IFSC Limited)என்று பெயரிடப்பட்ட இந்தத் துணை நிறுவனம், 2024, மே 7 அன்று அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டது. முன்னதாக, 2024, பிப்ரவரி 8-ம் தேதி, IFSC கிஃப்ட் சிட்டியில் நிதி நிறுவனத்தை அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி தனது தடையில்லா கடிதத்தை வழங்கியது.IFSC-யில், IREDA-வின் நுழைவு புதிய வணிக வாய்ப்புகளைத் திறக்கும் என்பதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் அதன் உலகளாவிய தடத்தை நிறுவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

முக்கிய தினங்கள்

உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினம் (World Red Cross and Red Crescent Day) - மே 8 

கூ.தக. : 2024  ஆம் ஆண்டிற்கான உலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறை தினத்தின் கருப்பொருள் "மனிதநேயத்தை உயிர்ப்பித்தல்" என்பதாகும்.

 

அறிவியல் தொழில்நுட்பம் 

இந்தியாவின் முதலாவது வணிக ரீதியான பேட்டரி ஆற்றல் சேமிப்பு அமைப்பு  திட்டமானது (Battery Energy Storage System (BESS) project) டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் (Delhi Electricity Regulatory Commission (DERC)) ஒழுங்குமுறை ஒப்புதலைப் பெற்றுள்ளது.

  • இந்தத் திட்டத்தை BSES ராஜ்தானி பவர் லிமிடெட் (BSES Rajdhani Power Limited (BRPL)) இந்தியா கிரிட் டிரஸ்ட் (India Grid Trust (IndiGrid)) மற்றும் மக்கள் மற்றும் கிரகத்திற்கான உலகளாவிய ஆற்றல் கூட்டணி (Global Energy Alliance for People and Planet (GEAPP)) ஆகியவை  இணைந்து உருவாக்குகிறது. .

  • கிரகத்திற்கான உலகளாவிய ஆற்றல் கூட்டணி (GEAPP),   2026 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1 Giga Watt (GW)  BESS திறனை (BESS commitments)  அடைவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது 2032 ஆம் ஆண்டிற்குள் 47GW BESSஐப் பயன்படுத்துவதற்கான இந்தியாவின் இலக்குடன் ஒத்துப்போகிறது.

  • BSES ராஜ்தானி பவர் லிமிடெட் (BSES Rajdhani Power Limited (BRPL)) பற்றி: BRPL என்பது ரிலையன்ஸ் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட் (Reliance Infrastructure Limited) (51%) மற்றும் டெல்லி தேசிய தலைநகர் பிரதேச (National Capital Territory (NCT)) அரசு (49%) ஆகியவற்றுக்கு இடையேயான கூட்டு முயற்சியாகும் . புது தில்லியைத் தலைமையிடமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக  வினீத் சிக்கா என்பவர் உள்ளார்.  


ஸ்பிரிங்கர் நேச்சர் (Springer Nature)  மற்றும் அணுசக்தித் துறை (DAE)  இடையே உருமாற்ற ஒப்பந்தம் (Transformative Agreement) : திறந்த அணுகல் கொள்கைகளை மேம்படுத்துவதற்கும், அறிவார்ந்த ஆராய்ச்சியைப் பரப்புவதற்கான தடைகளை அகற்றுவதற்கும் ஸ்பிரிங்கர் நேச்சர் (Springer Nature) நிறுவனம் இந்திய அரசின் அணுசக்தித் துறையுடன் உருமாற்ற ஒப்பந்தத்தில் (TA) கையெழுத்திட்டுள்ளது. 

மேற்கண்ட ஒப்பந்தத்தின் படி,  அணுசக்தித் துறையின் (DAE)  50 க்கும் மேற்பட்ட மையங்கள் தங்க திறந்த அணுகலை (Gold Open Access (OA)) பயன்படுத்துவதற்கும், ஆராய்ச்சிக் கட்டுரைகளை  வெளியிடவும் அனுமதிக்கும். இந்த கட்டுரைகள், Springer Nature இன் 2,000+ அறிவியல் ஆராய்ச்சி இதழ்களில் வெளியிடப்படும். 

கூ.தக. : சர்வதேச அளவில் மிகச்சிறந்த அறிவியல் ஆராய்ச்சிகள் வெளியீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஸ்பிரிங்கர் நேச்சர் குரூப், ஒரு ஜெர்மன்-பிரிட்டிஷ் நிறுவனமாகும்.  


"மாமத்" (Mammoth) என்ற பெயரில்  உலகின் மிகப்பெரிய செயல்பாட்டு நேரடி காற்று பிடிப்பான் மற்றும் சேமிப்பு   ஆலையை (Direct Air Capture and Storage(DAC + S) plant )  “கிளைம் வொர்க்ஸ்  AG  (Climeworks AG) என்ற சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்த நிறுவனம் அமைத்துள்ளது.  இது காற்றில் இருந்து கார்பன் டை ஆக்சைடை (CO2) பிரித்தெடுத்து பாறை வடிவில் நிலத்தடியில் சேமிக்கும்.

இந்த ஆலை ஆண்டுக்கு 36,000 டன் CO2 ஐப் பிடிக்கும் திறன் கொண்டது.


”பாட்டிலிப்ஸ் சந்திரயானி” (Batillipes Chandrayaani) எனப் பெயரிடப்பட்டுள்ள புதிய வகை மெதுநடையன் (Tardigrade) அல்லது பாசி பன்றிக்குட்டிகள்,  தமிழ்நாட்டின் மண்டபம் கடற்கரையில் உள்ள கடல் வண்டல்களிலிருந்து, கேரளாவின் கொச்சியில் உள்ள கொச்சின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் ( Cochin University of Science and Technology (CUSAT)) கடல் உயிரியல் துறையின் ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு பற்றிய கட்டுரை  அறிவியல் ஆராய்ச்சி இதழான "ஜூடாக்சா" (Zootaxa) இல் வெளியிடப்பட்டது.

கூ.தக. :  மெதுநடையன் (Tardigrade) அல்லது பாசி பன்றிக்குட்டிகள் என்பவை  ஒரு நுண் விலங்குகள் இனத்தைச் சார்ந்த நீரில் வாழும் விலங்கு ஆகும். இதை வெறுங்கண்ணால் பார்க்க இயலாது நுண்நோக்கி உதவியுடன்தான் இதைப் பார்க்க முடியும். 



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot