Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

தமிழ்நாடு அரசின் ‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சாமனப்பள்ளி கிராமத்தில் தொடக்கம்

இந்தியாவிலேயே முதல் முறையாக 'மக்களைத் தேடி மருத்துவம்'  திட்டம் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள சாமனப்பள்ளி கிராமத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் 5-8-2021 அன்று தொடங்கி வைக்கப்பட்டது.  

  • ‘மக்களை தேடி மருத்துவம்’  திட்டம் எனும் பெயரில்  1 கோடி மக்களுக்கு வீடு தேடி மாத்திரை, மருந்துகள், மருத்துவ சிகிச்சைகள் வழங்குவதற்கான திட்டம் தமிழ் நாடு அரசால் தொடங்கப்படவுள்ளது. தமிழகத்தில் முதற்கட்டமாக 20 லட்சம் பேருக்கு இந்த சேவைகளும், அடுத்து விரைவில் 1 கோடி பேருக்கும் வழங்கப்பட இருக்கிறது. 
  • இத்திட்டத்தின் மூலம், நோயாளிகளின் வீடுகளுக்கே சென்று சில அவசியமான சேவைகள் வழங்கப்படவுள்ளன.  
  • சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்ட பலரும் ஆஸ்பத்திரிகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொண்டு வருகிறார்கள். இதைபோல உள்ள நோயாளிகளை கண்டறிந்து அவர்களின் வீடுகளுக்கே நேரடியாக சென்று தேவையான மருந்து மாத்திரைகள் வழங்கப்படும்.  
  • 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் இயலாமையில் உள்ள நபர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு உடல்நலப் பரிசோதனை மேற்கொள்ளப்படும். 
  • குறிப்பாக, ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், சிறுநீரகப் பிரச்சினைகள், குழந்தைகளின் பிறவிக் குறைபாடுகள், ஆகியவற்றைக் கண்டறிந்து, சிகிச்சை அளிப்பது இத்திட்டத்தின் முக்கியப் பணி. 
  • இதில், பொது சுகாதாரப் பணியாளர்கள், தன்னார்வலர்கள் பங்கேற்று, அவர்களின் சேவையை ஆற்ற இருக்கின்றனர்.

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot