Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (EVMs) மீதான உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் இருந்து வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT-Voter Verified Paper Audit Trail) சீட்டுகளை 100% சரிபார்க்க வேண்டும் என்ற கோரிக்கையை உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் (சஞ்சீவ் கன்னா (Sanjiv Khanna) மற்றும் திபாங்கர் தத்தா (Dipankar Datta))   கொண்ட பெஞ்ச் நிராகரித்ததன் மூலம், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் (electronic voting machines (EVMs)) நம்பகத்தன்மையை இந்திய உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் (Association for Democratic Reforms) இந்த வழக்கை தொடர்ந்திருந்தது, அவர்களின் சார்பாக வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் நீதிமன்றத்தில் வாதாடினார்.

VVPATஇல் வரிசை எண்கள், வேட்பாளர்களின் பெயர்கள் மற்றும் கட்சி சின்னங்களை bitmap படங்களாக சேர்ப்பது மென்பொருளைப் பதிவேற்றுவதிலிருந்து வேறுபட்டது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.

VVPATகளில் சின்னங்களை ஏற்றும் செயல்முறையில், நிரல் (programme) அல்லது நிலைப்பொருளை  (firmware) மாற்றவோ முடியாது. இந்த  நிலைபொருள் (firmware)  ஏற்கனவே VVPAT இன் நினைவகத்தில் (memory) நிறுவப்பட்டுள்ளது. கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் வாக்கு அலகு (ballot unit) சின்னம் ஏற்றும் செயல்பாட்டில் ஈடுபடவில்லை. அவை எந்த ஒரு மாற்றமும் செய்யப்படுவதில்லை. கட்டுப்பாட்டு அலகு மற்றும் வாக்குச் சீட்டு அலகில் உள்ள நிலைப்பொருள்  (firmware) எந்தவொரு வேட்பாளருக்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ சாதகமாக இல்லை என்று நீதிபதி சஞ்சீவ் கண்ணா (Sanjiv Khanna) தனது கருத்தை தெரிவித்தார்.

VVPAT களில் சின்னங்கள் எவ்வாறு ஏற்றப்படுகின்றன என்பதையும் நீதிமன்றம் விளக்கியது. இது வரிசை எண், வேட்பாளர் பெயர் மற்றும் சின்னம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்தக் கோப்பு வாக்களிப்பதற்கு 10 முதல் 15 நாட்களுக்கு முன்பு மற்றொரு சாதனத்தைப் பயன்படுத்தி VVPAT இயந்திரங்களுக்குச் செல்லும். VVPAT நினைவகம் காலியாக இருக்கும். அதற்கு முன்னதாக எந்த கட்சி  அல்லது வேட்பாளருக்கும் தகவல்கள் தெரிவிக்கப்படாது. 

 நீதிமன்றம் இயந்திரத்தில் உள்ள பாதுகாப்புகளை மதிப்பாய்வு செய்தது. இயந்திரத்தில் மீதான குறைபாடுகள் எதுவும் நீதிமன்றத்தில் நிரூபிக்கப்படவில்லை இருந்தாலும் நீதிமன்றம் இரண்டு வழிகாட்டுதல்களை வழங்கியது: 

1) தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு 45 நாட்களுக்கு சின்னம் ஏற்றும் அலகுகளைப் பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும். 

2) தோல்வியடைந்த முதல் இரண்டு வேட்பாளர்கள், குறிப்பிட்ட வாக்குச் சாவடிகளில் உள்ள 5% EVMகளில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலர்களைச் சரிபார்க்க அனுமதி வழங்கப்பட வேண்டும்.

இது தவிர, நீதிபதி சஞ்சீவ் கன்னா மேம்படுத்துவதற்க்கு பரிந்துரைகளை குறிப்பிட்டுள்ளார். இயந்திரங்கள் மூலம் காகித தணிக்கை சோதனை சீட்டுகளை எண்ணுவது மற்றும் எதிர்காலத்தில் வாக்கு எண்ணுவதை எளிதாக்க வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (VVPAT) இயந்திரங்களில் உள்ள சின்னங்களில் பார்கோடுகளைப் பயன்படுத்துவது ஆகியவை இதில் அடங்கும். 


VVPAT  மீதான இதற்கு முந்தைய நீதிமன்ற தீர்ப்புகள்:

2013இல் நீதிமன்றம் வெளியிட்ட ஒரு தீர்ப்பில், நேர்மையான தேர்தலுக்கு  VVPAT அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. மற்றொரு வழக்கில்,  VVPAT சரிபார்ப்பை ஒரு சட்டமன்றத் தொகுதியில் இருந்து 5 ஆக உயர்த்துவதை ஆதரித்தது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot