Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic Voting Machine) எவ்வாறு இயங்குகிறது ?

 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றம், தனது தீர்ப்பில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்  எவ்வாறு இயங்குகிறது என்பதை மனுதாரர்களுக்கு தெளிவு படுத்தியுள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது: வாக்குச்சீட்டு அலகு (ballot unit), கட்டுப்பாட்டு அலகு (control unit) மற்றும் VVPAT.



  • கட்டுப்பாட்டகம் (control unit) ஒரு கணக்கீடு கருவி போலச் செயல்படுகிறது. வாக்குச்சீட்டு அலகில் எத்தனை முறை பொத்தான்கள் அழுத்தப்படுகின்றன என்பதன் அடிப்படையில் மொத்த வாக்குகளை இது கணக்கிடுகிறது. இது எந்த அரசியல் கட்சிக்கோ அல்லது வேட்பாளருக்கோ சாதகமாக இல்லை. இது வாக்குச் சீட்டு அலகில் உள்ள பொத்தான்களை அழுத்துவதற்கு மட்டுமே பதிலளிக்கிறது.
  • சின்னங்கள் ஏற்றப்பட்ட பிறகு, வாக்குச் சீட்டுகளில் குறிப்பிட்ட பொத்தான்கள் ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒதுக்கப்படும்.
  • வாக்குச்சீட்டில் எவ்வாறு வேட்பாளர்களுக்கு பொத்தான்கள் ஒதுக்கப்படுகின்றன. அரசியல் வேட்பாளர்களுக்கான பொத்தான்கள் அவர்களின் பெயர்களின் அகர வரிசையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.  முதலாவதாக, தேசிய மற்றும் மாநில அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். அவர்களைத் தொடர்ந்து மற்ற மாநில பதிவு செய்யப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் உள்ளனர். சுயேட்சை வேட்பாளர்கள் கடைசி இடத்தில் உள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot